"ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம்
"ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண” , ரெண்டு சுழி “ன” மற்றும் " ந" என்ன வித்தியாசம் ? தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும் , மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. " ண" இதன் பெயர் டண்ணகரம் , " ன" இதன் பெயர் றன்னகரம் , " ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. மண்டபம் , கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ , அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ' ட ' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல் , சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ , அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ' ற ' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது... நினைவில் கொள்க.. மண்டபமா ? மன்டபமா ? சந்தேகம் வந்தா... பக்கத்துல ' ட ' இரு...