Posts

என் அப்பா

Image
கால் ஆக்ஸிலேட்டர் வரை எட்டாத வயதில் தன் மடியில் அமரவைத்து ஸ்டியரிங்  வீலை  என்னை பிடிக்க வைத்து கார் ஓட்ட வைத்தார்.  நான் தான் கடை பூட்ட வேண்டும் என்று கடை வேலை ஆள் பூட்டிய  கடையை மறுபடியும் திறந்து என்னை வைத்து பூட்டினர்.  மூவ்-ஐந்து பருவத்தில் கால் முறிந்து ஸ்கூலில் இருந்த என்னை மூன்று மாடி கீழே தூக்கி வந்தார், எனக்கு கால் கழுவிவிட்டு என்றும் தன் குழந்தைதான் என்று பார்த்துக் கொண்டார். தன் தந்தையின் இன்ஜினியரிங் கனவை நான் அடைந்து நினைவாக்கிய  போது அலாதி பெருமிதம் கொண்டார். ஐம்பதுகளில் இருந்து எழுபதுகள் வரை வந்த பல தமிழ் பட பாடல்களின் அர்த்தங்களின் உன்னதத்தை உணர வைத்தார். அதன் பின் இருபத்துஏழு  வருடம் கூட வாழாவிட்டாலும் தூர நின்று ஆதரவு தந்தார். வாழ்வியல் பாடங்கள் பல கற்றுத்தந்தார், எனது வளர்ச்சியை கண்டு பெருமை கொண்டார் என் அப்பா. அவர் உள்ளத்தால் தன்மை ஆனவர்,  குணத்தால் தங்கமானவர்,  பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர், பொறுமையின் சிகரம், நிதானத்தின் மகுடம், சிம்ப்ளிசிட்டிக்கு உதாரணம்.    ஈசானிய மடத்தில் வாழ்ந்து, ஈசனின் மலையில் ஐக்கியம் ஆனார்.

ஆசைகள் கோடி

  என்னில் அடங்கி இருக்கும் கோடான கோடி  ஆசைகள்...ஒரு சிலவை இதோ...                இவ்வுலகம் வசந்த சோலையாக மாற ஆசை                வரட்சி இல்லா பசுமை நிறைய  ஆசை                துன்பங்கள் நீங்கி இன்பம் மலர ஆசை                தீமைகள் விலகி நன்மைகள் பெருக ஆசை                யுத்தங்கள் இல்லா உலகில் அமைதி நிலவ ஆசை                கலைகள் கலந்த ஞானம் ஒளிர ஆசை               மனிதருள் நல்நேசம் வளர ஆசை                நோய்கள் இல்லா தேகம் உள்ள ஆசை                காமம் குறைந்த காதல் கனிய ஆசை                ஈருடல் ஓர் உயிராய் வாழ ஆசை                நீங்க காதல் என்னுள் என்றும் சுடர்விட்டு எரிய ஆசை                 ஆசைகள் பேராசைகளாக மாறா இருக்க ஆசை                இவ்வாசைகள் இப்பிறவியில் நிறைவேறாவிட்டாலும் இவை நிகழ ஆசை                நான்  மீண்டும் பிறவா வரம் வேண்டி ஆசை.

பெண்கள் தினம்

பெண்மை இனிதானது , மென்மையானது , மேன்மையானது . தமிழரின் கலாச்சாரத்தில் பெண் என்றால் அச்சம் , நாணம் , பயிர்ப்பு . தொன்றுதொட்டு நமது சமூகத்தில் பெண் பொறுமைக்கு எடுத்துகாட்டு. அதனால்தானோ பூமி தாய் , தாய்நாடு என்று சுமைதாங்கும் அனைத்தையும் பெண்னோடு இணைத்தனர் பெரியோர் மில்லிநிய்யத்து பெண்கள் ஆணுக்கு நிகராய் வேலைகள் செய்கின்றனர். இதனால் தானோ அவர்கள் தனியே பொருள் ஈடியவுடன் துணை  தேவையில்லை என்று என்னுகிறார்கள்? பெண்ணின் மனரீதியான தேவை பொருள்ரீதியான தேவையை விட அதிகம். இதை Men are from Mars women are from venus என்ற பிரபலமான ஆங்கில புத்தகத்தில் John Gray கூறியுள்ளார். இந்த தேவையை ஆண்களும் சரிவர புரிந்துகொள்வதில்லை, பெண்களும் ஆண்களுக்கு புரியும்படி எடுத்து கூறுவதில்லை. பெண்களை போற்ற தனியே ஒரு தினம் தேவையா? இந்த நிலைக்கு காரணம் இரண்டு என்று குறலாம். ஒன்று பெண்களே தங்களை தானே குறைத்து எடை போட்டுக்கொள்வது. மற்றொன்று ஆண்கள் பெண்களின் தேவையை புரிந்துகொள்ளதது. பெண்களின் நிலை மாற இருவழி பயணம் தேவை. பெண்கள் தங்களை தானே தாழ்த்திக்கொள்ளாமலும், ஆண்கள் பெண்களை தன் இட்சை போக்கிக்கொள்ளும் கருவியாக மட்டும் பார்

"ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம்

   "ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண” ,   ரெண்டு சுழி “ன” மற்றும் " ந" என்ன வித்தியாசம் ? தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும் ,  மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. " ண" இதன் பெயர் டண்ணகரம் , " ன" இதன் பெயர் றன்னகரம் , " ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. மண்டபம் ,  கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ ,  அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  ' ட '  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல் ,  சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ ,  அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  ' ற '  வர்க்க   எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது... நினைவில் கொள்க.. மண்டபமா ?  மன்டபமா ?  சந்தேகம் வந்தா... பக்கத்துல ' ட '  இரு