பெண்கள் தினம்


பெண்மை இனிதானது , மென்மையானது , மேன்மையானது . தமிழரின் கலாச்சாரத்தில் பெண் என்றால் அச்சம் , நாணம் , பயிர்ப்பு . தொன்றுதொட்டு நமது சமூகத்தில் பெண் பொறுமைக்கு எடுத்துகாட்டு. அதனால்தானோ பூமி தாய் , தாய்நாடு என்று சுமைதாங்கும் அனைத்தையும் பெண்னோடு இணைத்தனர் பெரியோர்


மில்லிநிய்யத்து பெண்கள் ஆணுக்கு நிகராய் வேலைகள் செய்கின்றனர். இதனால் தானோ அவர்கள் தனியே பொருள் ஈடியவுடன் துணை  தேவையில்லை என்று என்னுகிறார்கள்? பெண்ணின் மனரீதியான தேவை பொருள்ரீதியான தேவையை விட அதிகம். இதை Men are from Mars women are from venus என்ற பிரபலமான ஆங்கில புத்தகத்தில் John Gray கூறியுள்ளார். இந்த தேவையை ஆண்களும் சரிவர புரிந்துகொள்வதில்லை, பெண்களும் ஆண்களுக்கு புரியும்படி எடுத்து கூறுவதில்லை.

பெண்களை போற்ற தனியே ஒரு தினம் தேவையா? இந்த நிலைக்கு காரணம் இரண்டு என்று குறலாம். ஒன்று பெண்களே தங்களை தானே குறைத்து எடை போட்டுக்கொள்வது. மற்றொன்று ஆண்கள் பெண்களின் தேவையை புரிந்துகொள்ளதது.

பெண்களின் நிலை மாற இருவழி பயணம் தேவை. பெண்கள் தங்களை தானே தாழ்த்திக்கொள்ளாமலும், ஆண்கள் பெண்களை தன் இட்சை போக்கிக்கொள்ளும் கருவியாக மட்டும் பார்க்காமல், பெண்களின் மென்மையை, பொறுமையை, தேவையை புரிந்து கொண்டு நடத்தினால் பெண்களின் பெருமை பரிசாற்ற, பாதுகாக்க இன்று மட்டும் இல்லாமல் என்றுமே பெண்கள் தினம்தான்.

பெண்மை இனிதானது , மென்மைன்வனது , மேன்மையானது. அதை போற்றுவோம் எந்நாளும்.

Comments

Popular posts from this blog

"ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம்

ஆசைகள் கோடி

என் அப்பா